பயணம் 9
அதிகாலையில் முதன்மைத் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு குழுவாய் சரியான கால இடைவெளியில் நகரத் தொடங்கியது. எந்த ஆராவாரமும் இல்லாமல் வீரர்கள் மௌனம் காத்து அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவில் கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மரத்தின் உச்சியில் விசித்ரமான சப்தம் கேட்டு வீரர்கள் சுதாகரித்து நிமிர்ந்து பார்த்தார்கள்.