Share it

Saturday, September 29, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 07 


பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது. 

Wednesday, September 19, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு


அத்தியாயம் - 02 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

Saturday, September 15, 2018

அவள் | சிறுகதை | கதிரவன்

மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது. கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 06 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 06 


அரசரின் வார்த்தையிலிருந்த உண்மை விளங்கித் தன்னுடைய பிழையை உணர்ந்த இளவரசர், அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து மனக் குழப்பத்துடன் தன் அறையை நோக்கி விரைந்தார். வீரர்கள் உடன் வருவதையும் மறந்து அறைக்குச் சென்று மேஜையின் மீதிருந்த ஓலையில் தளபதிகளை உடனடியாகக் கிளம்பி வருமாறு தன் கைப்பட எழுதி, தன்னுடைய முத்திரையிட்டுத் திரும்பினார். அறையின் வாயிலில் வேல் பிடித்த வீரர் நின்றிருந்தார். அவரை அருகில் அழைத்து "இதை நம் பாசறையிலிருக்கும் தளபதிகளிடம் உடனே சேர்ப்பித்து விடுங்கள். தாமதம் வேண்டாம்" என்று உத்தரவு பிறப்பித்த மறுகணம் கிளம்பினார் வீரர். 


கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"

"..................................."


Friday, September 14, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 05 


கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள். 

இளவரசரோ உறக்கமின்றி இரவை எரித்து அந்த ஒளியில் விடியலை எதிர்பார்த்துத் தன்னுடைய அலுவல் அறையின் சாளரத்தின் ஓரம் தெரியும் மூன்றாம் பிறையைப் பார்த்தபடியே நின்றவரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் முடிவில்லாமல் நீந்திக் கொண்டிருந்தது. 


ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி


இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில்
கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது

ஞாபகங்கள்
அத்தியாயம் - இரண்டு
வக்கீல் வந்தியத்தேவன்

அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான்.


Wednesday, September 12, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 04 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 04


அந்தி சாய்ந்து ஆதவன் மறையும் மாலை நேரம். பொன்னிறக் கதிர் எங்கும் பரவி மங்களகரமாய்க் காட்சிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளவரசர் அவரின் மெய்க்காவல் வீரர்களுடன் புயலெனப் புரவியில் பாசறையைச் சென்றடைந்தார். வாயிலில் எக்காளம் அடித்து இளவரசரின் வருகை தெரிவிக்கப்பட்டது. முன்புறத்தில் நின்றிருந்த உபதளபதிகளும் வீரர்களும் நேராய் வரிசையாய் நின்றார்கள். வீரர்கள் இமைகள் கூட இமைக்காமல் நேராய் நிமிர்ந்து நின்றிருந்தார்கள். அறையிலிருந்த தளபதிகள் அவ்விடம் வந்து வரிசையாய் நின்றார்கள். குதிரையை விட்டுக் குதித்து இறங்கியவர் வீரர்கள் நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தார். வீரர்கள் வாளையும் வேலையும் நிலத்திலூன்றி மண்டியிட்டு இளவரசருக்கு வணக்கத்தைக் கூறினர். வீரர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கமளித்தார். தளபதிகள் வந்து அவரை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்கள். 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 03 


அவை முடிந்து விரைவாய்த் தளபதிகள் அனைவரும் தங்களது பாசறையில் ஒன்று கூடினார்கள். உபதளபதிகளில் ஒருவர் மெதுவாய் அருகே வந்து 'நாயகரே விவாதத்தில் எதாவது முக்கிய விஷயம் உண்டா?' என்று பவ்யமாய் கேட்டார். 'ஆம் உண்டு. ஆனால் அதைப்பற்றி விவாதிப்பதற்காகவே அனைவரும் ஒன்றாய் வந்துள்ளோம். முதலில் நம் ஒற்றர்கள் அனைவரையும் இங்கு வரச் சொல்லுங்கள்' என்று பரபரப்புடன் உத்தரவிட்டதைப் பார்த்ததும் புரிந்து கொண்டார்கள் விவாதத்தின் வீரியத்தை. 'இப்பொழுதே அழைக்கிறேன்' என்று வேகமாய் உபதளபதிகள் ஆளுக்கொரு திசைக்குச் சென்றார்கள்.


Friday, September 7, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 02 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா



முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 


சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள். 


Thursday, September 6, 2018

அவளும் நானும் | சிறுகதை | கதிரவன்

எல்லோரும் படிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லணும்னு முடிவு பண்ணிட்டேன். சரி அப்ப இதுவரை பயணிக்காத இடத்திற்கு போகலாம்னு முடிவு செஞ்சதும் நான் எழுதுன பதிவு தான் நீங்க படிக்க போறது. அப்புறம் என்ன யோசனை எனது விரல்களை பிடிச்சுக்கோங்க, உங்களை ஒரு அழகான குடும்பத்திற்குள் அழைத்து செல்கிறேன்.


Wednesday, September 5, 2018

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி


அலைகள் கடலில் ஓய்வதில்லை 
ஞாபகங்களை மனது மறப்பதில்லை 

கதையைத் தொடங்கும் முன்... 

இந்தக் கதை நமது மனதில் சதா தோன்றிக் கொண்டிருக்கும் ஞாபகங்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. மனதில் ஆழப் பதிந்துவிட்ட எதையுமே இலகுவில் மறந்துவிட முடியாது. பல நாள் மறந்திருந்த ஒன்று மீண்டும் ஞாபகம் வரும்போது அது இரண்டு வகைகளில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஒன்று அது சந்தோஷத்தை தரும். இல்லையேல் துக்கத்தை ஏற்படுத்தி உறங்க விடாமல் செய்யவும் கூடும். இந்த ஞாபகங்கள் தரும் அந்த இரண்டு விளைவுகளும் இந்தக் கதையில் சிலர் வாழ்வில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியதே இந்தக் கதை. ஞாபகம் வருகிறது... 


Share it