Share it

Tuesday, August 28, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 01 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படிந்திருக்கும். அதை மறக்க நினைப்போரும் உண்டு... மறைக்க நினைப்போரும் உண்டு... அதேபோல் மறை(ற)ந்து இருக்கும் வரலாறு இன்றளவும் தமிழக வரலாற்றில் உண்டு. அதை வெளிக்கொணரப் பல வரலாற்று அறிஞர்கள் தங்களின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் ஆய்வுகளை மையமாய்க் கொண்டு தமிழக வரலாற்றையும் இருண்ட காலத்தைப் பற்றியும் சோழர் சரித்திரத் தேடல் என்ற தலைப்பில் கட்டுரை வடிவில் அளித்தார் திரு. மாரிராஜன் அண்ணண் அவர்கள். அவரளித்த தீக்குச்சியின் வெளிச்சத்தின் மூலம் இருண்ட காலத்தைக் காண ஆவல் கொண்டேன் நான். அந்த ஆவலே இந்தக் காலத்தைப் பற்றி எழுதவும் தூண்டியது. அந்தக் காலத்தை நோக்கிப் பயணப்படப் பல ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் பல நல்லுள்ளங்களின் ஆதரவும் இத் தொடரை எழுத வழிநடத்திச் சென்றது. யாரைப் பற்றியது? எந்தக் காலமது? என்ன நடந்தது? பார்ப்போம்.


Wednesday, August 22, 2018

ஞாபகங்கள் | அறிமுகம் | தொடர் கதை | சிகரம் பாரதி

நான் உங்கள் சிகரம் பாரதி. எனது எழுத்துப் பயணம் 2002இல் துவங்கியது. தமிழ்ப் பாடப் புத்தகங்களும் நூலகங்களும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்குத் தீனி போட்டதுடன் என் எழுத்தார்வத்தையும் தூண்டின. அவ்வப்போது கவிதைகள், சிறுகதைகள் என கிறுக்கிக் கொண்டிருந்தேன். 

2003ஆம் ஆண்டிலும் பின்னர் 2006 தொடங்கி 2010 வரையிலும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். அந்தக் கால கட்டத்தில் தேசிய நாளேடுகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதை, கட்டுரைகளை அனுப்பி வந்தேன். அதன் போது எனது நண்பர்களையும் எழுதத் தூண்டி அவற்றை எனது கையெழுத்துப் பத்திரிகை மூலமாக வெளிக்கொணர்ந்தேன். அத்தோடு நிற்கவில்லை. என் நண்பர்களின் படைப்புகளை தேசிய நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெறச் செய்தேன். 


Tuesday, August 21, 2018

நட்ட மரம் | சிறுகதை | பிரமிளா பிரதீபன்

எப்போதும் இல்லையென்றாலும் எப்போதாவது தன் வலக்கையின் நான்கு விரல்கள் கொண்டு மெதுவாய் ஸ்பரிசித்து தலையை வருடி விடுவான். அப்படியே சுவர்க்கத்திற்குள் நுழைந்தாற் போல் உடலெங்கும் மின்சாரம் பரவி அரைமயக்க நிலையில் கண்கள் சொக்கும். 

ஓரிரு நிமிடங்கள்தான். சடாரென வருடலின் வேகம் தணிந்து விரல்கள் சிறிதுசிறிதாய் செயலற்றவைகளாகி ஓய்ந்து போய் தலையில் சரிந்து கிடக்க அவன் தூங்கி போயிருப்பான். 

சுகபோதையாய் திரண்டு தழுவிய தூக்கத்தின் அரைகுறை ஆரம்பம் எட்ட ஓடிப்போகும். மீண்டும் அந்த வருடலுக்காய் ஏங்கி அவன் கைகள் பிடித்து அசைத்துப்பார்ப்பாள். மெல்லமாய் உலுக்கிப்பார்ப்பாள். அவன் முழுவதுமாய் தூங்கி முடித்திருப்பான்.


Share it