"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"
"நீ இல்லாம எப்படி ஜெய்?"
"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."
"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"
"..................................."
"சரி விடு. நா பாத்துக்குறேன்...."
"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."
"சரி ஜெய்"
தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.
"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.
"வாழ்த்துக்கள்டா மாப்ள..."
"என்ன சுசி நீயும்.....?"
"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"
"ம்....... நா எதுக்கு........"
"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப் போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."
"சரிடா."
"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்."
பதிலுக்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...
Post Date 05/07/2012 | Edit date 15/09/2018
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
No comments:
Post a Comment